முள்ளில்லாத ரோஜாவென கையில் ஏந்தினேன்
பிரிவு எனும் முள்ளால் நெஞ்சை குத்தி விட்டாயே...
உன் தோல் சாய்ந்து கண்கள் மூடும் நேரம்
தாய் மடி உறக்கம் தந்தவள் ஆனால் என்
உறக்கங்கள் தொலைக்கும் பிரிவை தந்து விட்டாயே ! ! !
என் உணர்வுகளை கடந்து செல்கிறாய்
உன் உணர்வுகளை மூடி மறைத்து கொண்டு ! ! !
உருவங்களின் மேல் தோற்றம் இல்லை உன் மேல் கொண்ட அன்பு
சொர்க்கம் தாண்டி வென்ற உள்ளத்தின் தோற்றம் அது ..
ஆனால் நீ வெறும் கானல் நீராய் என்னை ஏமாற்றிக் கொண்டே ! ! !
நம் உறவின் அர்த்தங்கள் தேடி சொர்க்கத்தில்
தொலைந்த என்னை நரகத்தில் கண்டெடுத்தேன்
உனைப் பிரியும் நேரமிதில் ..............
உருவங்கள் பிரிந்தாலும் உணர்வுகள் தொலைந்து போவதில்லை....
No comments:
Post a Comment